அம்மா என்பார், அய்யா என்பார்...
உங்கள் வீட்டு பிள்ளை என்பார்...

ஓட்டு கேட்பார்... உங்களில் ஒருவன் என்பார்...
ஊருக்கு உழைக்க ஒரு வாய்ப்பு கேட்ப்பார்...
உதவிக்கு ஓடி வருவேன் என்பார்...

இத்தனையும் சொல்லிவிட்டு சட்டசபையில்
விபச்சாரம் செய்வார்...

இந்த வீணர்களின் கையில்
இந்த நாடு இருந்துநாசமாய் போகுதடி ஞானதங்கமே...
நீ நாலும் தெரிஞ்சி நடத்துக்க ஞானதங்கமே...

அழகாய் ஆடிடுவார்...
அழுது புரண்டிடுவார்....
நீதிக்கு குரல் கொடுப்பார்...
ஏழைக்கு தோழன் என்பார்...

நடிக்க வந்ததே நான் அறியாதது என்பார்...
உன் தோளின் கைப்போட்டே புகைப்படம் எடுக்கவிட்டுஉன் மடியில் கைவைக்கும் கூட்டமடி...ஞானதங்கமே..

ஆடி முடித்து அமரும் இடமாய்...
அவருக்கு ஆட்சிக்கட்டில் ஆகுமடி ஞானதங்கமே..
இவர்கள் கையில் இளிச்ச வாயர் கூட்டம் இருக்கு ஞானதங்கமே...
நீ இருப்பதை காப்பாத்திக்க ஞானதங்கமே..
வானம் நீலம்,
வெறுமை காற்று
நினைவு நீ

பாசவெளியில்
பால்மனம் மாறா
சோளக்கதிரில் வண்டுபோல்
உன் நினைவு

நீண்ட பயணத்தில்
நிஷ்கலங்க நிலா
நிதர்சனமான
நிழலுடன்

நிர்வாண நீரோடையில்
நிற்கின்றேன் நான்

காதலியே!

நீ எனக்கு கவிதை போல
எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்

காதலியே!

நீ எனக்கு பஸ்சில் வரும் வாந்தி போல...

எடுத்தால் பக்கத்து சீட்டுகாரன் திட்டுவான்
எடுக்காவிட்டால் எனக்கு ஆபத்து.

காதலியே!

நீ எனக்கு பஞ்சரான பைக் போல

தள்ளி கொண்டும் போக முடியாது.
விட்டு விட்டும் போக முடியாது.

காதலியே!

நீ எனக்கு கண் வலி (மெட்ராஸ் ஐ) போல

என்னத்தான் கருப்பு கண்ணாடி போட்டு
ஊருக்கு மறைத்தாலும்
வலி இருக்கத்தானே செய்யும் எனக்கு

காதலியே!
நீ எனக்கு கவிதை போல

எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்


நான் சரவணன்....
புதிதாக வந்த பழைய ஆள்...

மீண்டும் பதிவு எழுத வந்து உள்ளேன்...

சபை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


-----சரவணன்------

Posted by step18
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger templates