Monday, August 31, 2009
at
3:49 AM
|
காதலியே!
நீ எனக்கு கவிதை போல
எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்
காதலியே!
நீ எனக்கு பஸ்சில் வரும் வாந்தி போல...
எடுத்தால் பக்கத்து சீட்டுகாரன் திட்டுவான்
எடுக்காவிட்டால் எனக்கு ஆபத்து.
காதலியே!
நீ எனக்கு பஞ்சரான பைக் போல
தள்ளி கொண்டும் போக முடியாது.
விட்டு விட்டும் போக முடியாது.
காதலியே!
நீ எனக்கு கண் வலி (மெட்ராஸ் ஐ) போல
என்னத்தான் கருப்பு கண்ணாடி போட்டு
ஊருக்கு மறைத்தாலும்
வலி இருக்கத்தானே செய்யும் எனக்கு
காதலியே!
நீ எனக்கு கவிதை போல
எனக்கு தவிர யாருக்கும் புரியாதவள்
Posted by
step18
Labels:
சும்மா எழுதியது
0 comments:
Post a Comment